-
“நான் எவ்வாறு ஜெபிப்பது? எதற்காக நான் ஜெபிப்பது? எதற்காக ஜெபம் இரகசியமானது? எவ்வாறு நீண்ட நேரம் ஜெபிக்கக்கூடும்? என்னுடைய தேவைகள் தேவனுக்கு ஏற்கனவே தேரியவில்லையா? நான் ஜெபிக்காதிருந்தால் எனக்கு என்ன சம்பவிக்கும்? என் ஜெபம் உண்மையாக கேட்கப்படுமா?” ஏற்றவேளையில் மற்றும் பயிற்சிகரமாக, டேக் ஹெவர்ட் மில்ஸ் அவர்கள் வெளியிட்டுள்ள இப்புத்தகத்தை நீங்கள் வாசிக்கும்போது இதை போன்ற கேள்விகளுக்கு பதிலை கண்டுபிடிப்பீர்கள்.
-
கலையை மேம்படுத்துவது தன்னிலுள்ள திறமை அல்லது நுட்ப தொழில்களை மேம்படுத்துவதாகும். கலை சிறந்த மக்களுக்கு தயவு உண்டாகும் என்று வேதாகமம் கூறுகிறது. ஊழியப்பணியின் கோரிக்கை மாபெரும் திறனாகவே உள்ளது. இந்த நவீன புத்தகமாகிய “ஊழியத்தின் கலை திறன்” ஊழியப்பணியில் வாஞ்சையாயுள்ளவர்களுக்கு மிக அவசியமான ஒரு வளபொருள். ஊழியத்தைக் குறித்து நன்மை மற்றும் தீமையை சிந்திக்கும் தன்மை, ஊழியப்பணி என்றால் என்ன, ஊழியப்பணியின் சேவகர்களாக இருக்கும் உங்களுடைய தேவைகள் என்ன மற்றும் ஊழியனாக நீங்கள் நிறைவேற்ற வேண்டிய பணித்தொகுப்புகள் யாவன என்பதை தெளிவாக இப்புத்தகம் வழங்குகின்றது. ஊழியப்பணியில் எவ்வாறு நீங்கள் இயங்குகிறீர்கள் என்பதை குறித்து எப்பொழுதாவது நீங்கள் வியப்படைந்ததுண்டா? டேக் ஹெவர்ட் மில்ஸ் வாயிலாக எழுதப்பட்ட இத்தனிச்சிறந்த புத்தகம், தேவனுடைய அழைப்பிற்கு பாத்திரவான்களாக நடக்க மற்றும் உங்களை நீங்கள் முழுமையாக கர்த்தருடைய ஊழியத்திற்கு ஒப்புக்கொடுக்க சவால் விடுத்து வழிநடத்தும்.
-
இத்தலைச்சிறந்த பணியில், டேக் ஹெவர்ட் மில்ஸ் அவர்கள் இன்றைய ஊழியத்தில் காணப்படும் மெய் வாழ்க்கையின் சூழ்நிலைகளை ஆராய்ந்துள்ளார். பயிற்சிரீதியில் நம் வாழ்க்கையில் காணப்படும் பொருளாதாரம், அரசியல், எதிர்பாலினம் மற்றும் ஊழியத்தில் நிகழும் நடைமுறை இடைவினைகளைக் குறித்து உரையாற்றியுள்ளார். அழைப்பை பயிற்சிகரமான கோட்பாட்டிற்கு வழிகாட்டும் பொது அறிவுள்ள இப்புத்தகம் ஒவ்வொரு கிறிஸ்தவ தலைவர்களுக்கும் முக்கியமானதொன்றாகும். வேதாகம கல்லூரி மற்றும் பொது ஊழியம் செய்யும் திருச்சபை பணியாளர்களுக்கு இப்புத்தகம் பரிந்துரை செய்யப்படுகிறது.
-
செழிப்பு மற்றும் சம்பத்தை ஆளுமை செய்யும் அதிர்ச்சிகரமான கோட்பாடுகளை இயேசு கிறிஸ்து வெளிப்படுத்துகிறார். உள்ளவனெவனோ அவனுக்கு கொடுக்கப்படும்! இது எவ்வளவு நியாயமற்ற ஒலியாக இருக்கிறது! இருப்பினும், நம் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் நடக்கின்ற உண்மையாகும். இந்த புத்தகம் சிறிதாக புரிந்துக்கொண்ட வேதவாக்கியத்தின் விளக்கங்களை விளக்க முற்படுகிறது. டேக் ஹெவர்ட் மில்ஸ் அவர்களால் எழுதப்பட்ட இந்த புதிய புத்தகத்தை நீங்கள் வாசிக்கும் போது செழிப்பின் இரகசியத்தின் உட்பார்வையை சிறந்த விதத்தில் நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள்.
-
தலைவர்களுக்கு தேவனுடைய முதன்மையான தேவைகள் அதிகமாயிருப்பினும், இத்தலைப்பைக்குறித்து மிகவும் சொற்பமாகவே எழுதப்பட்டுள்ளது. சபைகள் அதிக நிலையான நிலவரத்தை அடையும் கருத்தைக்கொண்டு டேக் ஹெவர்ட் மில்ஸ் அவர்கள் இப்புத்தகத்தில் மிக முக்கிய கோட்பாடுகளை வெளிக்கோடுகளாக எழுதியுள்ளார். இப்புத்தகத்தின் பொருள் பயிற்சிக்கரமாக மற்றும் பொருத்தமுள்ளதாக இருப்பதால் அநேக சபை தலைவர்களுக்கு தவிர்க்க இயலாத கருவியாக மாறியுள்ளது.
-
இயற்கைக்கு அப்பாற்பட்டதொன்று இன்றும் உள்ளதா? இயற்கைக்கு அப்பாற்பட்ட ரீதியில் நான் இயங்க சாத்தியமா? தேவன் மக்களை இன்னும் சுகமாக்குகிறவராயிருந்தால், ஏன் எல்லோரையும் அவர் சுகமாக்குவதில்லை. சுகமாக்கும் அபிஷேகத்தை நான் எவ்வாறு பெற்றுக்கொள்வது? டேக் ஹெவர்ட் மில்ஸ் அவர்கள் வாயிலாக எழுதப்பட்ட உற்சாகமூட்டும் இந்த புத்தகத்தின் தாள்களினூடாக நீங்கள் கடந்து செல்லும்போது, இதை போன்ற மற்றும் பல்வேறு அநேக கேள்விகளுக்கு பரிசுத்த ஆவியானவரின் அநுக்கிரகத்தின் மூலம் பதிலை கண்டுபிடிக்க இயலும்.
-
கலகத்தின் ஜனங்கள் தங்களுக்கு செய்த நன்மைகளை நினைவுகூரமாட்டார்கள். பொதுவாக சில விஷயங்களை மறக்க தேர்ந்தெடுப்பார்கள். யூதாஸ், கர்த்தர் செய்த நன்மைகளை நினைவுகூரவில்லை. இயேசுவிடம் கேட்டவைகளையும் கண்டவைகளையும் அவன் நினைவுகூர தவறினான். ஆகையால் இவன் “யூதாஸ்” என்னும் இழிவான கதாபாத்திரமாக இன்றும் அறியப்படுகிறான். ஒரு ஊழியனுக்கு அவசியமான ஆவிக்குரிய சுபாவங்களில் முக்கியமான ஒன்று நினைவுகூருதலின் திறமையாகும். நினைவுகூராத மக்கள் நன்மை பெறுவது அபூர்வம். அவர்கள் சில உயர்ந்த ஸ்தானங்களை அடைய தோல்வியடைகின்றனர். அரிதாக உரையாடும் இத்தலைப்பு ஒரு விசேஷ புத்தகமாக இருக்கிறது, இது தேவன் உங்களுக்கு கொடுத்த
-
“ஒரு வேளை, நீங்கள் எதிர்கொள்ளவேண்டிய மாபெரும் எதிரி ‘சகோதரர்கள் மத்தியில் வாசம் செய்துக்கொண்டு குற்றஞ்சாட்டுகிறவன்’ ஆக இருக்கக்கூடும்.” டேக் ஹெவர்ட் மில்ஸ் எழுதியுள்ள இந்த கலைச்சிறந்த புத்தகத்தை வாசிக்கையில், உங்களுக்கு விரோதமாக உபயோகிக்கும் குற்றஞ்சாட்டு என்னும் ஆயுதத்தை மேற்கொள்ளும் மாபெரும் உட்பார்வையை அடைவீர்கள்.
-
போதகர்கள் தங்கள் பிரசங்கங்கள் மூலமாக தங்கள் திருச்சபை மக்களை பரவசப்படுத்தி, அவர்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற மன அழுத்தத்தோடு ஊழியம் செய்கிறார்கள். மக்களால் உண்டாகும் இந்த மனஅழுத்தம், மக்கள் சிலுவையின் செய்தியை அறியாத அளவிற்கு கிறிஸ்துவின் வார்த்தைகளை புரட்ட காரணமாக இருக்கிறது. கிறிஸ்துவை “ஆதாயம்” படுத்த, நம்மை “இழக்க” வேண்டும் என்ற கிறிஸ்தவத்தின் அடிப்படை உண்மைக்கு இன்று நாம் திரும்புகிறோம். நாம் கிறிஸ்துவிற்காக தியாகம் செய்ய வேண்டும், பாடுபட வேண்டும், மரிக்க வேண்டும் என்று பிரசங்கிக்கும் பொழுது, நாம் திருச்சபையில் இதுவரை இழந்துபோன வல்லமை மீண்டும் திரும்பும். அது எவராக இருந்தாலும், அவர் எவ்வளவு வெற்றி பெற்றவராக இருந்தாலும், எவ்வளவு வல்லமை பெற்றவராக இருந்தாலும், கிறிஸ்துவின் வார்த்தையிலுள்ள வல்லமையை அழிக்க இயலாது.
-
பல்வேறு வகையான இரத்தத்தைக் குறித்து வேதாகமம் கூறுகிறது: வெள்ளாட்டுக்கடாக்களின் இரத்தம், ஆட்டுக்கடாக்களின் இரத்தம், புறாக்களின் இரத்தம்! இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவமன்னிப்பில்லை என்று வேதாகமம் திட்டவட்டமாக அறிவிக்கிறது. எனவே, பல்வகையான இரத்தம் பாவங்களை நீக்க இயலாதோ? இதன் பதில், உறுதியாக “இல்லை” என்பதேயாகும்! எனவே, நம் பாவங்களை எவ்வாறு கழுவ சாத்தியம்? வேறொன்றுமில்லை, இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் மட்டுமே ஆகும்! இயேசு கிறிஸ்துவின் இரத்தத்திற்கு நம் பாவங்களை கழுவி இரட்சிப்பை நமக்குள் கொண்டு வர வல்லமையுண்டு. மிக முக்கியம்வாய்ந்த இந்த புத்தகத்தில் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தை குறித்த பல்வேறு தூய்மையான சத்தியங்களை கண்டுபிடிப்பீர்கள். இயேசுவின் இரத்தம் உங்களுக்கு எவ்வாறு ஜீவன் அளித்தது என்பதையும் இயேசுவின் இரத்தம் தன் முக்கியத்துவத்தை எவ்வாறு அடைந்தது என்பதையும் நீங்கள் கண்டுக்கொள்வீர்கள். இயேசு கிறிஸ்துவின் இரத்தம் மற்றும் பரிசுத்த ஆவியானவர் இடையேயுள்ள உரையாடலையும் நீங்கள் புரிந்துக் கொள்வீர்கள். உண்மையாகவே இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தில் வல்லமை உண்டு.