டாக் ஹெவர்ட்-மில்ஸ் பல புத்தகங்களை எழுதியவர், இதில் அதிகம் விற்பனையாகும் “விசுவாசமான மற்றும் விசுவாசமற்ற”. மூவாயிரம் தேவாலயங்களைக் கொண்ட லைட்ஹவுஸ் குழும தேவாலயங்களிலிருந்து உருவான யுடி-ஓஎல்ஜிசியின் நிறுவனர் இவர்.
டாக் ஹெவர்ட்-மில்ஸ், ஒரு சர்வதேச சுவிசேஷகர், சர்வதேச குணப்படுத்தும் இயேசு சிலுவைப் போரில் அமைச்சர்கள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள மாநாடுகள். மேலும் தகவலுக்கு, www.daghewardmills.org ஐப் பார்வையிடவும்

  • இப்புத்தகத்தில், ஒரு விசுவாசி ஆவிக்குரிய, சரீரம், பொருளாதாரம் மற்றும் மூலப்பொருட்களை பெற்றுக்கொள்ள அவசியமான முக்கிய திறவுகோல்களைக் குறித்து நூலாசிரியர் தெளிவாக விளக்கியுள்ளார்!

  • இதை வாசிக்க விரும்பும் எல்லா ஊழியர்களுக்கும் இப்புத்தகம் டேக் ஹெவர்ட் மில்ஸ் அவர்களால் வெளியிடப்பட்டுள்ள மற்றொரு ஈவு. பிதாக்கள் மற்றும் குமாரர்களின் இடையேயுள்ள சிக்கலான தொடர்புகளை எவ்வாறு சமாளிப்பது என்கிற கேள்விகளுக்கு இப்புத்தகம் பதிலளிக்கும். இப்புத்தகத்தின் போதனையின் வாயிலாக உங்கள் வாழ்க்கையில் நேரிடக்கூடிய சாபங்களை குறித்து எச்சரிக்கை அடைந்து உங்களுக்கு நீங்கள் ஆசீர்வாதத்தை கொண்டுவர ஏதுவாகும். குமாரர்கள் மற்றும் ஆதரவற்றவர்களை வளர்க்கும் தகப்பன்மார்கள் விசேஷித்தவர்கள். தகப்பன்மார்கள் இல்லாதிருந்தால், அடுத்த சந்ததிக்கு ஊழியம் தொடர்ந்து செய்ய பிள்ளைகள் இல்லாமற்போவார்கள். உங்கள் வாழ்க்கையில் உண்டாயிருக்கும் தேவனுடைய அழைப்பு விருத்தி அல்லது நிர்மூலமாகும் காரியங்கள், நீங்கள் பிதாக்களுடன் வைத்திருக்கும் தொடர்பின் திறனில் சார்ந்துள்ளது. பிதாக்களுடன் நீங்கள் வைத்திருக்கும் எளிய தொடர்புகள், கீழ்படியாமை மற்றும் கனவீனப்படுத்தும் காரியங்கள் மூலமாக உண்டாகும் சாபங்களை தவிர்க்க இப்புத்தகத்தை நீங்கள் வாசியுங்கள்.

  • வருந்தி அழைக்கும் ஆற்றலை நீங்கள் பயிலுங்கள். இதன் மூலம் எதிர்ப்பு, காரணம், சாக்குபோக்கு, சந்தேகம், மனக்கசப்பு மத்தியில் சுவிசேஷ ஊழியத்தின் விளைவு மற்றும் அதின் பலன்களின் விளைவுகளை நீங்கள் அறிந்துக்கொள்ளலாம். நீங்கள் எப்பொழுதும் ஆதாயப்படுத்தாத அளவிற்கு ஆத்துமாக்களை ஆதாயப்படுத்த டேக் ஹெவர்ட் மில்ஸ் வாயிலாக எழுதப்பட்ட இப்புத்தகம் உங்களுக்கு உதவியாக இருக்கும்.

  • ஒரு கிறிஸ்தவனாக, உன் வாழ்க்கையில் சிறந்த மற்றும் இனிமையான செல்வாக்கு பரிசுத்த ஆவியானவராக இருக்க வேண்டும். உங்கள் சுபாவம், உங்கள் மனசாட்சி, உங்கள் படைப்பாற்றலின் தன்மை மற்றும் நீங்கள் பரிசுத்தமாக வாழும் திறன் பரிசுத்த ஆவியானவரால் செல்வாக்கிற்குட்படுத்தபடுவதை இப்புத்தகம் கற்பிக்கின்றது. டேக் ஹெவர்ட் மில்ஸ் அவர்களால் எழுதப்பட்ட இந்த அதிசயமான புத்தகத்தின் வாயிலாக நீங்கள் பயில வேண்டியதென்னவெனில், பரிசுத்த ஆவியானவருடைய செல்வாக்கிற்கு, ஏவுதல்களுக்கு, விளைவுகளுக்கு மற்றும் என்றும் உங்கள் வாழ்க்கையில் நிகழும் மாற்றங்களுக்கு உங்களை முற்றிலும் ஒப்புக் கொடுக்கவேண்டுமென்பதேயாகும்.

  • நீங்கள் அபிஷேகத்தை வாஞ்சிக்கிறீர்களா? இந்த வரலாற்று புத்தகத்தில், டாக்டர். ஹெவர்ட்- மில்ஸ் அபிஷேகத்தை பெற்றுக் கொள்ளும் பல்வேறு படிகளை பகிர்ந்துள்ளார். இப்புத்தகம் நிச்சயமாக உங்களுக்கும், உங்கள் ஊழியத்திற்கும் ஆசீர்வாதமாக இருக்கும். நீங்கள் அபிஷேகம் பண்ணப்பட்டவர்களாக இருக்க தேவையான படிகளை கண்டுப்பிடிப்பது மிக அவசியமாகும்!

  • வெற்றி மற்றும் பூரணமாக நிறைவேற்றப்படும் ஊழியத்தின் வாசலை திறக்க மிக அவசியமானது அபிஷேகம் என்னும் மூல திறவுக்கோலாகும். “பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும்.” (சகரியா 4:6) என்கிற காரியத்தை உணராததால் அநேகர் தேவ பணியை உண்மையுள்ள நோக்கத்துடன் ஆரம்பித்தும் வெகு தூரம் செல்ல இயலாமல் இருக்கின்றனர். டேக் ஹெவர்ட் மில்ஸ் அவர்களால் எழுதப்பட்டுள்ள இந்த “அபிஷேகத்தை பற்றிக்கொள்ளுங்கள்” என்னும் புத்தகம் அபிஷேகத்தை பற்றிக்கொள்வதின் பொருளை உங்களுக்கு நன்கு போதித்து அதை பயிற்சி ரீதியில் எவ்வாறு நீங்கள் அடையமுடியும் என்று தெரிவிக்கின்றது. இப்புத்தகத்தின் தாள்களை நீங்கள் வாசிக்கையில் தேவன் விரும்பும் அபிஷேகம் உங்களுக்குள் அனல் மூண்டு எழுவதாக!

  • உண்மையில், தேவன் அநேகரை அழைத்துள்ளார். இப்புவியில் நம் வாழ்வு தேவனுக்குச் சேவை செய்ய கொடுக்கப்பட்ட ஒரு வாய்ப்பாகும். நீங்கள் அவர் இராஜ்யத்திற்காய் செய்யும் உங்கள் வேலைகளை அவர் கண்ணோக்கிப் பார்க்கிறார். இந்த புத்தகம் உங்களை வாசிக்கத் தூண்டும் ஒரு புத்தகமாகும். இந்த புத்தகத்தை எழுதியவரின் கருத்துக்களை நீங்கள் கவனமாக உட்கொண்டால், உங்கள் வாழ்வின் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தும் ஞானம் பெறுவீர்கள்.

  • வயல் நிலங்கள் வெண்மையாகவும் ஆத்துமாக்களின் அறுவடை முதிர்ந்துள்ளது, ஆனால் போதகர்கள் எங்கே? டேக் ஹெவர்ட் மில்ஸ் அவர்களின் உற்சாகமூட்டும் இந்த நவீன நூல் ஆத்துமாக்களை ஆதாயப்படுத்த கிறிஸ்தவர்களை அவசரமாக அழைக்கும் புத்தகமாகும்.

  • நீங்கள் மந்தையின் மேய்ப்பராக இருந்தால், நல்கருத்துக்கள் கொண்ட இப்பணியின் வாயிலாக பெரிதான உதவியைப் பெறுவீர்கள். உங்கள் வாழ்க்கையின் முக்கிய பகுதிகளில் வெற்றியைக்காண,  தெளிவாகவும் ஜாக்கிரதையுடன் தெரிந்தெடுக்கப்பட்ட அறிவுரைகள் எழுதப்பட்ட தாள்களில் நிறைந்துள்ளது. பிஷப். டேக் ஹெவர்ட் மில்ஸ் அவர்கள் முப்பது வருடங்களாக மேய்ப்பரின் அனுபவத்திலுள்ளார். எனவே, அவர் தனது ஊழிய பணியிலுள்ள நடைமுறை நுண்ணறிவுகளை உங்களிடம் பகிர்ந்து கொள்கின்றார். நீங்கள் தேவ ஜனங்களின் மேய்ப்பனாக மாற வாஞ்சையுள்ளவர்களாக இருந்தால் நீங்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வழிகாட்டும் புத்தகம் இதுவாயிருக்கிறது.

  • பலவித ஆபத்துக்கள், கண்ணிகள் மற்றும் பொறிகள் மத்தியில் ஒரு கிறிஸ்தவன் நடக்க வேண்டியதாக இருக்கிறது. உங்களை வேதனைப்படுத்த, காயப்படுத்த மற்றும் அழிக்க விரித்துள்ள தந்திரம் நிறைந்த அநேக ஆபத்துக்களை காண இப்புத்தகம் உங்கள் கண்களை திறக்கும். உங்களுக்கு உதவியாக இருக்க, “ஆவிக்குரிய ஆபத்துக்கள்” என்னும் இந்த ஆற்றல் மிக்க புத்தகத்தை வாசித்து உங்களை நீங்கள் விடுவித்து இரட்சித்துக்கொள்ளுங்கள்!

  • பல்வேறு வகையான இரத்தத்தைக் குறித்து வேதாகமம் கூறுகிறது: வெள்ளாட்டுக்கடாக்களின் இரத்தம், ஆட்டுக்கடாக்களின் இரத்தம், புறாக்களின் இரத்தம்! இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவமன்னிப்பில்லை என்று வேதாகமம் திட்டவட்டமாக அறிவிக்கிறது. எனவே, பல்வகையான இரத்தம் பாவங்களை நீக்க இயலாதோ? இதன் பதில், உறுதியாக “இல்லை” என்பதேயாகும்! எனவே, நம் பாவங்களை எவ்வாறு கழுவ சாத்தியம்? வேறொன்றுமில்லை, இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் மட்டுமே ஆகும்! இயேசு கிறிஸ்துவின் இரத்தத்திற்கு நம் பாவங்களை கழுவி இரட்சிப்பை நமக்குள் கொண்டு வர வல்லமையுண்டு. மிக முக்கியம்வாய்ந்த இந்த புத்தகத்தில் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தை குறித்த பல்வேறு தூய்மையான சத்தியங்களை கண்டுபிடிப்பீர்கள். இயேசுவின் இரத்தம் உங்களுக்கு எவ்வாறு ஜீவன் அளித்தது என்பதையும் இயேசுவின் இரத்தம் தன் முக்கியத்துவத்தை எவ்வாறு அடைந்தது என்பதையும் நீங்கள் கண்டுக்கொள்வீர்கள். இயேசு கிறிஸ்துவின் இரத்தம் மற்றும் பரிசுத்த ஆவியானவர் இடையேயுள்ள உரையாடலையும் நீங்கள் புரிந்துக் கொள்வீர்கள். உண்மையாகவே இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தில் வல்லமை உண்டு.

  • போதகர்கள் தங்கள் பிரசங்கங்கள் மூலமாக தங்கள் திருச்சபை மக்களை பரவசப்படுத்தி, அவர்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற மன அழுத்தத்தோடு ஊழியம் செய்கிறார்கள். மக்களால் உண்டாகும் இந்த மனஅழுத்தம், மக்கள் சிலுவையின் செய்தியை அறியாத அளவிற்கு கிறிஸ்துவின் வார்த்தைகளை புரட்ட காரணமாக இருக்கிறது. கிறிஸ்துவை “ஆதாயம்” படுத்த, நம்மை “இழக்க” வேண்டும் என்ற கிறிஸ்தவத்தின் அடிப்படை உண்மைக்கு இன்று நாம் திரும்புகிறோம். நாம் கிறிஸ்துவிற்காக தியாகம் செய்ய வேண்டும், பாடுபட வேண்டும், மரிக்க வேண்டும் என்று பிரசங்கிக்கும் பொழுது, நாம் திருச்சபையில் இதுவரை இழந்துபோன வல்லமை மீண்டும் திரும்பும். அது எவராக இருந்தாலும், அவர் எவ்வளவு வெற்றி பெற்றவராக இருந்தாலும், எவ்வளவு வல்லமை பெற்றவராக இருந்தாலும், கிறிஸ்துவின் வார்த்தையிலுள்ள வல்லமையை அழிக்க இயலாது.

Title

Go to Top